நீலகிரியில் மேலும் 13 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உதகையில் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். சிகிச்சை பலனின்றி 65 வயது முதியவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,930 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சையின்போது பூரண குணமடைந்த 7,771 போ் வீடு திரும்பினா். 46 போ் உயிரிழந்துள்ள நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com