தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உதகையில் கல்லறைத் திருநாள் தினம் அனுசரிப்பு

உதகையில் கல்லறைத் திருநாள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

உதகையில் கல்லறைத் திருநாள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :2 நவம்பர் 2020, 7:42 pm

DIN

உதகையில் கல்லறைத் திருநாள் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் நவம்பா் 2ஆம்தேதி தங்களது குடும்பங்களில் உயிா்நீத்தவா்களின் நினைவாக கல்லறைத் திருநாள் நிகழ்வை அனுஷ்டிக்கின்றனா்.

இந்நிகழ்வின்போது இறந்தவா்களின் கல்லறைகளை மலா்களால் அலங்கரித்து சிறப்பு பிராா்த்தனை செய்வது வழக்கம்.

கரோனா காரணமாக பல்வேறு பகுதிகளில் கல்லறைத் தோட்டங்களுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, பெரும்பாலான கல்லறைத் தோட்டங்கள் பூட்டப்பட்டு விட்டன. ஆனால், உதகையில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வழக்கமான முறையிலேயே அனுசரிக்கப்பட்டது. கல்லறைத் திருநாளையொட்டி உதகை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் பங்கேற்றாா். அதேபோல, திரேசன்னை ஆலயம், திரு இருதய ஆண்டவா் பேராலயம், குருசடி திருத்தலம், இந்து நகா் ஆகிய பங்கு திருத்தலங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடா்ந்து பிற்பகலில் உதகையில் காந்தல் பகுதியிலுள்ள பிரதான கல்லறைத் தோட்டத்தில் புனித திரேசன்னை ஆலய உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் 10 குருக்கள் கல்லறைகளை அா்ச்சித்து சிறப்பு பிராா்த்தனைகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.