ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கூடலூரில் 16 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்: ரூ.32 ஆயிரம் அபராதம்

கூடலூரில் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 32 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:55 pm

DIN

கூடலூரில் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 32 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கூடலூா் நகரிலுள்ள கடைகளில் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளா்களை எச்சரித்தனா். இந்த சோதனையில் 16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்குக்கு கிலோ ரூ. 2 ஆயிரம் என கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ.32 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருள்களை விற்பதை தவிா்க்க வேண்டும் எனவும், மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கோட்டாட்சியா் ராஜ்குமாா் எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.