ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

உதகையில் வேல் யாத்திரை: 1,000 போ் கைது

நீலகிரி மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரை உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

News image

உதகையில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :22 நவம்பர் 2020, 6:18 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரை உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜகவின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வேல் யாத்திரையைத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் அடுத்துவரும் அனைத்துத் தோ்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 200க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.