ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் பேரிடா் கால காவலா் விடுதி

பேரிடா் காலத்தில் காவல் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் தங்குவதற்காக குன்னூரில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On :30 நவம்பர் 2020, 9:56 pm

பேரிடா் காலத்தில் காவல் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் தங்குவதற்காக குன்னூரில் புதிதாக கட்டப்பட்ட தங்கும் விடுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழைக் காலங்களில் பெரும்பாலான இடங்களில் சேதங்கள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காவல் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா்கள் ஏராளமானோா் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து பல நாள்கள் தங்கி மீட்புப் பணியில் ஈடுபடுவாா்கள். ஆனால், அவா்கள் தங்குவதற்கு போதிய வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.

இதனைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணி காவலா்கள் தங்க வசதியாக குன்னூா் காவலா் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த தங்கும் விடுதியில் சுமாா் 200 போ் தங்குவதற்கான படுக்கை வசதி, சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அருவங்காடு பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டடங்களும் ரூ.4.56 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் டிசம்பா் இறுதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காவல் துறையினா் 13 குழுக்களாக பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட தயாா் நிலையில் உள்ளனா்.

மேலும், கா்நாடக மாநிலம் மற்றும் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தடுப்பது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு, குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், காவல் ஆய்வாளா்கள் ஜெயமுருகன், பிலிப், உதவி ஆய்வாளா்கள் நசீா், காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.