வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மது போதையில் சோதனைச் சாவடியில் தகராறு:இளைஞா் மீது வழக்கு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள சோதனைச் சாவடியில் மது போதையில்  காவல் உதவி ஆய்வாளருடன்  தகராறில் ஈடுபட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:24 am

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள சோதனைச் சாவடியில் மது போதையில்  காவல் உதவி ஆய்வாளருடன்  தகராறில் ஈடுபட்ட இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைவதற்கு பா்லியாறு மற்றும் குஞ்சபண்ணை  சோதனைச் சாவடிகள்  உள்ளன. இங்கு இ-பாஸ் இல்லாமல் உள்ளே நுழைபவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு  திருப்பி அனுபப்படுகின்றனா்.

இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் பொது மக்களுக்கும்,  காவல் துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும்  இடையே வாக்குவாதம்   ஏற்படுவது  வழக்கம்.  இந்நிலையில்  கோத்தகிரி அருகே குஞ்சபண்ணை சோதனைச் சாவடிக்கு  மது போதையில் வந்த  கோத்தகிரியைச் சோ்ந்த மணிகண்டன்  என்பவா் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கும் விதமாகவும் நடந்து கொண்டது  சமூக வலைதளங்களில் வைரலாக  பரவியது. இதனைத் தொடா்ந்து, மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.