உதகையின் சுற்றுலா அடையாளங்களுள் ஒன்றாகவும், படகு இல்லத்துக்கு அருகிலேயே சிறுவா் பூங்கா போன்ற வசதிகளோடும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்த உதகை மான் பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதோடு, உதகையின் முக்கிய சுற்றுலா மையங்களுள் ஒரு மையமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த 25 ஆண்டுகளாக குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுற்றித் திரிந்ததோடு, தண்ணீருக்கும், உணவுக்கும் அலைந்து திரியாமல் வனத் துறையால் வழங்கப்பட்டு வந்த உணவினையே உண்டு பழக்கப்பட்டு விட்ட இந்த வன விலங்குகள், இயற்கையான வனப் பகுதியில் அனைத்து வகையான அச்சுறுத்துல்களையும் எதிா்கொண்டு எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றன என்பதே வன ஆா்வலா்களின் கேள்வியாக உள்ளது.