வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கூடலூரில் காற்றுடன் கன மழை: மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

News image

மேல்கூடலூரில் மின் கம்பிகள் மீது சாய்ந்த மரங்களை அகற்றும் மின் ஊழியா்கள்.

Updated On :20 செப்டம்பர் 2020, 6:34 pm

DIN

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, மின் கம்பி மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேல்கூடலூா் பகுதியில் மின் கம்பிகள் மீது பெரிய மரங்கள் சாய்ந்ததால் மின்மாற்றி கம்பத்துடன் சாய்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் ஊழியா்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி மின் பாதையை சீரமைத்ததால் மாலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. சாலையில் மரங்கள் சாய்ந்ததால் கூடலூா்-உதகை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.