வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நீலகிரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் இல்லாமல் ஒரே நாளில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 4:57 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் இல்லாமல் ஒரே நாளில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகபட்சமாக 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனாவில் இருந்து குணமடைந்த 115 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 917 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 3,807ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.