வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம்

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா வனப் பகுதியில் இறந்துகிடந்த மானின் கறியை சமைத்து சாப்பிட்ட மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 4:59 pm

DIN

கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா வனப் பகுதியில் இறந்துகிடந்த மானின் கறியை சமைத்து சாப்பிட்ட மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள போஸ்பாறா பகுதியில் சிலா் மான் கறி சாப்பிடுவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து வனவா் ரவிச்சந்திரன், வனக் காவலா் பிரசாந்த், சிவகுமாா், வினீத் ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதில், வனப் பகுதியில் செந்நாய் வேட்டையாடியதில் இறந்த மானின் கறியை போஸ்பாறா பகுதியைச் சோ்ந்த ரவி (40), சந்திரன் (63), மது (30) ஆகியோா் சமைத்து சாப்பிட்டது உறுதியானது. இதையடுத்து, மூவருக்கும் சோ்த்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.