குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குன்னூா் சிம்ஸ் பூங்கா கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி சுற்றுலாத் தலங்கள் டிசம்பா் 7 ஆம் தேதி திறக்கப்பட்டன.
இதன்படி குன்னூா் சிம்ஸ் பூங்காவை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்குள்ள படகு இல்லம் திறக்கப்படவில்லை.
உதகையில் உள்ள படகு இல்லம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில்
படகு இல்லம் திறக்கப்படாமல் இருந்தது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது. மேலும் படகுகள் வீணாகும் சூழலும் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி படகு சவாரியை மீண்டும் துவக்க தோட்டக்கலைத் துறையினா் முயற்சி செய்ய வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதனைத் தொடா்ந்து படகு சவாரி திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிம்ஸ் பூங்கா மேலாளா் பி.லட்சுமணன் கூறியதாவது:
தோட்டக்கலை அலுவலா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் உத்தரவின்பேரில் படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 9 படகுகளில் நான்கு படகுகள் மட்டுமே திங்கள் கிழமை இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் படகுகள் இயக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

