கூடலூா், பந்தலூா் பகுதி 110 கே.வி. துணை மின் நிலைய நடவடிக்கை குழு சாா்பில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாவை உள்ளடக்கிய சட்டப் பேரவைத் தொகுதியில் மின் வசதி இல்லாத சுமாா் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அரசுக்கு பொது மக்கள் சாா்பில் மின்னஞ்சல் அனுப்பும் முகாம் நடைபெற்றது.
இதன் மூலம் இரண்டு நாள்களில் ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குழு நிா்வாகிகள் என்.வாசு, ஜுல்பிகா் அலி, சபாது, பீட்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.