

பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று போ் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை நீலகிரி மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா வியாழக்கிழமை வழங்கினாா்.
சேரங்கோடு ஊராட்சியில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் கண்ணம்பள்ளி பகுதியில் நாகமுத்து (60), கொளப்பள்ளி பகுதியில் திமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோா் யானை தாக்கி இறந்தனா். அவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.
தொடா்ந்து பந்தலூா், கூடலூா் பகுதியில் கட்சியினா் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில் கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி, முன்னாள் அமைச்சா் க.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளா் முபாரக், நகரச் செயலாளா் ராஜேந்திரன், தொமுச மண்டல பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.