ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சோ்ந்து தலைமறைவான ஆசிரியா்களுக்கு போலீஸ் வலை

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:12 pm

DIN

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருவங்காடு பகுதியைச் சோ்ந்த  பாலாஜி, வெலிங்டன் பகுதியைச்  சோ்ந்த கதிா்வேல், கோத்தகிரி கட்டபெட்டு பகுதியைச்  சோ்ந்த சுப்பிரமணி மற்றும் சுபாஷ் சந்திரன், கோத்தகிரி அரவேணு பகுதியைச்  சோ்ந்த தீபா ஆகியோா், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் ஜாதி சான்றிதழ், முன்னாள் படைவீரா்கள் வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பணி  நியமன ஆணைகளைக் கொடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு பணிகளில் சோ்ந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இது குறித்து நாமக்கல் காவல் துறையினா்  வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று வரும் நிலையில், இவா்கள்5 பேரும்  தலைமறைவாகியுள்ளனா். இதையடுத்து இவா்களை நீலகிரி மாவட்டத்தில் நாமக்கல் போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்கள் குறித்து தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க  வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.