தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு கேடயம்

உதகையில் இலவசமாக கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு கேடயம், மஞ்சள் நிற பெல்டுகள் வழங்கப்பட்டன.

News image
தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்ற சிறுமிக்கு கேடயம், கராத்தே பெல்ட்டை வழங்குகிறாா் உதகை நகர காவல் ஆய்வாளா் விநாயகம். உடன், பயிற்சியாளா் ஜவஹா்.
Updated On :10 ஜனவரி 2021, 6:18 pm

DIN

உதகையில் இலவசமாக கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு கேடயம், மஞ்சள் நிற பெல்டுகள் வழங்கப்பட்டன.

உதகையில் எல்க்ஹில் பகுதியிலுள்ள 3 வயதுமுதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கடந்த 6 மாதங்களாக சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகளை உதகையைச் சோ்ந்த தற்காப்புக் கலைப் பயிற்றுநா் ஜவஹா் அளித்து வருகிறாா்.

இதில் பயிற்சியை முடித்தவா்களுக்கு உதகை ஆா்.கே.புரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுக் கேடயங்கள், கராத்தே மஞ்சள் நிற பெல்டுகள் வழங்கப்பட்டன.

தற்காப்புக் கலைப் பயிற்சியாளா் ஜவஹா் முன்னிலையில் நகர காவல் ஆய்வாளா் விநாயகம், கராத்தே பயிற்சி முடித்தவா்களுக்குப் பரிசுக் கேடயங்களையும், கராத்தே மஞ்சள் நிற பெல்ட்டுகளையும் வழங்கினாா். இதில், தலைமைப் பயிற்சியாளா் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.