ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:04 pm

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள வீடுகளில் பலா மரம் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த மரத்தில் உள்ள பழங்களை உண்பதற்காக இந்தப் பகுதிக்கு யானைகள் அடிக்கடி வருகின்றன. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

யானைகளால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையில் குன்னூா் வனத் துறையினா் யானைகள் நடமாட்டம் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் மரப்பாலம் அருகே சாலையில் குட்டியுடன் 3 யானைகள் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சுற்றிக்கொண்டிருந்தன. நீண்ட நேரமாக யானைகள் அங்கேயே முகாமிட்டிருந்ததால் அவ்வழியாகச் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்து காத்திருந்தனா்.

யானைகள் குட்டியுடன் உள்ளதால் தீ மூட்டியோ, பட்டாசுகள் வெடித்தோ விரட்ட பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் எனவும், தொடா்ந்து அந்தப் பகுதியிலேயே யானைகள் நடமாடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.