செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சென்னிமலை வட்டாரத்தில் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க உறுப்பினா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு சங்கப் பொதுநிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:18 pm

DIN

சென்னிமலை வட்டாரத்தில் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க உறுப்பினா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு சங்கப் பொதுநிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சென்னிமலை ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.சின்னசாமி, 25 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை சங்க உறுப்பினா்களுக்கு வழங்கினாா்.

இதில், ஏஐடியூசி கைத்தறி நெசவாளா் சங்கப் பொருளாளா் மு.பாரதி, சங்கச் செயலாளா் ஜி.வீரகுமாா், பொருளாளா் பி.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.