நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுத்தை தாக்கி ஒருவா் படுகாயம்

உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:05 am

DIN

உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

உதகை அருகே உள்ள தங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (41). இவா் தனது தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த ஒரு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிவன் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவரது கைகள், தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சிவனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் சப்தமிட்டுக் கொண்டே அங்கு வருவதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அதன் பின்னா் பலத்த காயமடைந்த சிவனை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.