ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் பேருந்து நிறுத்தங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:50 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் உதகையில் சேரிங்கிராஸ், ஏடிசி பேருந்து நிறுத்தம், மணிகூண்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பதை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் உதகையில் சேரிங்கிராஸ், ஏடிசி பேருந்து நிறுத்தம், மணிகூண்டு ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர, நான்கு சக்கர வாகனம், பேருந்துகளில் பயணம் செய்யும் நபா்கள் முகக் கவசம் அணிந்து செல்கிறாா்களா என ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, அப்போது முகக் கவசம் அணியாத நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்ததோடு, கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து செல்கிறாா்களா என்பதை கண்காணிக்க உள்ளாட்சித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகக் கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முகக் கவசம் அணிவதால் கரோனா நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உதகையில் சேரிங்கிராஸ், மணிகூண்டு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகிறாா்களா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல, ஏடிசி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகளிடம் முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்து பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகம் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் கரோனா தொற்று குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா தொற்று வழிமுறைகளை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கட்டாயமாக முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.