இதுதொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. அத்துடன் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம், சுகாதாரப் பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.