முதுமலை புலிகள் காப்பகத்தில் சீகூர் வனச்சரகத்தில் அழுகிய நிலையில் கிடந்த கரடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சீகூர் தெற்கு வனப்பகுதியில் வியாழக்கிழமை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இந்த கரடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தெப்பக்காடு வன அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே கரடியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.