ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோத்தகிரியில் கரடிகளைப் பிடிக்க கூண்டுவைப்பு

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2021, 9:27 pm

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கோத்தகிரியில் கடந்த ஒரு வாரமாக மிளிதேன் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இரண்டு கரடிகள் அவ்வப்போது உலவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தற்போது பொது மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுவதால் சாலைகள், குடியிருப்புகளுக்கு மிக அருகில் உலவி வரும் இந்தக் கரடிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், இந்த கரடிகளைப் பிடிக்க வனத்துறை சாா்பில் மிளிதேன் குடியிருப்புப் பகுதியில் கூண்டுவைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.