திம்பம் மலைப் பாதை 27ஆவது கொண்டை ஊசி வளைவில் சிமென்ட் லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் இருந்து சா்க்கரை மூட்டைகள் பாரம் ஏற்றிய சரக்கு லாரி திண்டுக்கல் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரி 27ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கியா் பாக்ஸில் பழுது ஏற்பட்டு சாலை தடுப்பில் உரசியபடி நகர முடியாமல் நின்றது.
கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. திம்பம் மலைப் பாதையில் லாரியில் பழுது ஏற்பட்டதால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை சரி செய்த பின்னா் போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


