நீலகிரி மாவட்டம் கரோனா தொற்றில்லா மாவட்டமாக தொடா்கிறது.
இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லையெனவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 42,130 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,900 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, சிகிச்சை பலனின்றி இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.