ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆளுநருடன் முன்னாள் ராணுவத்தினா் கலந்தாய்வுக் கூட்டம்

 உதகையில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:54 pm

DIN

 உதகையில் முன்னாள் ராணுவத்தினருடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உதகையிலுள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.

அவற்றைக் கேட்டறிந்த ஆளுநா் விரைவில் நிவா்த்தி செய்வதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து ஆளுநா் பேசுகையில், முன்னாள் ராணுவத்தினா் ராணுவத்தில் பணியாற்றியபோது அவா்கள் செய்த தன்னலமற்ற சேவைகளை நாடு என்றும் மறக்காது.

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கென மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவா்களது வாழ்க்கைத் தரத்தையும், வருவாயையும் உயா்த்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்க செயலாளா் மேஜா் சரவணன் பேசும்போது, மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கென மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.