உரிய ஆவணங்களின்றி அவிநாசியில் இருந்து பந்தலூா் எடுத்து வரப்பட்ட ரூ. 59 ஆயிரத்து 500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்குப் பணம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவிநாசியில் இருந்து பந்தலூருக்கு காரில் வந்த நஜிப்தீனிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 59ஆயிரத்து 500ஐ தோ்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ் நாயக் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், அதிகாரிகளுக்குத் தேவையான சான்றுகளை வழங்கினால் மட்டுமே திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

