குன்னூா் லிட்டில் ஃபிளவா் தனியாா் பள்ளியின் சமையல் அறைக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு சென்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இந்நிலையில், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டுச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னூா் வனத் துறை அதிகாரிகள் கரடியின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.
உடனடியாக இந்த கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்படவுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

