நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
கோவை மாவட்டம், சூலூா் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்தை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பா் 8ஆம் தேதி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், உதகைக்கு இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி, குன்னூா் நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்தவா்களின் புகைப்படங்களுக்கு மலா் வளையம் வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினாா். அவருடன் அவரது மனைவி, மகள் ஆகியோரும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


