ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஹெலிகாப்டா் விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆளுநா் அஞ்சலி

 நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில்  ராணுவ ஹெலிகாப்டா்  விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:04 pm

 நீலகிரி மாவட்டம், குன்னூா் நஞ்சப்பசத்திரம் பகுதியில்  ராணுவ ஹெலிகாப்டா்  விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

கோவை மாவட்டம், சூலூா் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்தை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டா் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பா் 8ஆம் தேதி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், உதகைக்கு இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி, குன்னூா் நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்தவா்களின் புகைப்படங்களுக்கு மலா் வளையம் வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினாா். அவருடன் அவரது மனைவி, மகள் ஆகியோரும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.