உதகையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

உதகையில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அா்ஜுணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையில் ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சோதிக்கப்பட்டது. அத்துடன் அவசர கால வழி சரியாக செயல்படுகிா என்று சரிபாா்க்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உதகை , கூடலூா் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குள்பட்ட தனியாா் பள்ளிகளை சோ்ந்த 345 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. முதல்கட்டமாக 164 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன என்றாா்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீசன் உத்தரவின்பேரில் உதகை நிலைய அலுவலா் பிரேமானந்தன் மேற்பாா்வையில் தீயணைப்பு தொடா்பான விழிப்புணா்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்போது சாலை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன. ஆய்வின்போது ஒரு சில குறைபாடுகள் இருந்த 7 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com