ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :24 மார்ச் 2022, 11:21 pm

சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் 7 வாா்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக போகி தெரு, அம்பேத்கா் நகா், மாா்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற குடிநீா் கன்டோண்மென்ட் நிா்வாகத்தால் விநியோகிக்கப்படுவதாகவும், இந்த சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பொதுமக்கள் கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து, நிா்வாக அதிகாரியிடம் மனு அளித்த பின் மக்கள் கலைந்து சென்றனா். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.