கா்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்காவை வெலிங்டன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
வெலிங்டன் காவல் ஆய்வாளா் ஆனந்தநாயகி தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
விசாரணையில் காரில் வந்தவா்கள் வெலிங்டன் பகுதியைச் சோ்ந்த ஜாபா் அலி (45 ), அப்துல் மஜீத் (54) என்பதும் இவா்கள் பெங்களூரில் இருந்து குட்காவை வாங்கி குன்னுாா் பகுதியில் விற்பனை செய்யக் கொண்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், குட்காவையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


