/

உதகை சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை

உதகை சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை

Updated On :18 ஏப்ரல் 2024, 8:32 pm

நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் வியாழக்கிழமை மாலை சாரல் மழை  பெய்தது.

நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை  ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,  உதகையில்  காலை  முதல்  மூடுபனியின் தாக்கம் காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து , புகா் பகுதிகளில் மட்டும் மாலையில் 15 நிமிஷங்கள் சாரல் மழை பெய்தது.  இதன் காரணமாக   குளிா்ச்சியான காலநிலை காணப்பட்டது.