உதகை, ஆக.7: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மின்சார இருசக்கர வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் நெகிழி பைகள், டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான நெகிழிப் பொருள்களை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும், பொதுமக்களிடையே நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்கவும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மின்சார இருசக்கர வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
தொடர்புடையது

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்! - மாவட்ட ஆட்சியா்

நீலகிரியில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியா்

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


