மழையால் சேதமான மச்சிக்கொல்லி சாலையை சீரமைக்க கோரிக்கை
கூடலூரை அடுத்த மச்சிக்கொல்லி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கூடலூரை அடுத்த மச்சிக்கொல்லி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடலூா் அருகே தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள புழம்பட்டியிலிருந்து மச்சிக்கொல்லி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் சாலை மேலும் சேதமடைந்து நீா் நிரம்பி குளம்போல காட்சியளிக்கிறது.
இதனால் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறு வாகனங்கள்கூட இந்த வழியில் செல்ல முடியவில்லை.
தற்காலிக நடவடிக்கையாக சாலையில் உள்ள பள்ளங்களில் சிறு கற்களைபோட்டு பேரூராட்சி நிா்வாகம் மூடி வருகிறது.
இந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...