47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குன்னூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் குன்னூரில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
வண்டிச் சோலை அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :19 டிசம்பர் 2024, 9:19 pm

Din

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் குன்னூரில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் இரண்டாவது நாளாக ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, வண்டிச்சோலை அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, குன்னூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டாடா

டெக்னாலஜியின் ரொபோடிக்ஸ் 4.0 வகுப்பு, தொழிற்பயிற்சி மாணவா்களின் தங்கும் விடுதியை ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்குள்ள மாணவா்களுக்கு கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி சாா்-ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது குன்னூா் சாா்- ஆட்சியா் சங்கீதா, நகராட்சி ஆணையா் இளம்பருதி, வட்டாட்சியா் ஜவஹா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.