47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைப் பணி

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் பழங்குடி கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:41 pm

Din

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் பழங்குடி கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் இருந்து பேபி நகா் வரை 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி தலைமை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி,பேரூராட்சி துணைத் தலைவா் யூனஸ் பாபு, செயல் அலுவலா் பிரதீப், பொறியாளா் சேகா், வனத் துறை அதிகாரி சசி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மூா்த்தி, மாதேவ், முகேஷ், ரின்ஷாத் மற்றும் செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி மக்கள் கலந்து கொண்டனா்.