திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

அரசு அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி

அருங்காட்சியகம் படம் சென்னையில் இருந்து வந்தால் அனுப்பிவைக்கப்படும்... அரசு அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:33 am IST

உதகை அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா காட்சிமுனை ஆகிய இடங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, உதகை அருகே உள்ள தோடா் பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்திற்குச்சென்று, தோடா் பழங்குடியினரின் வாழ்வியல் முறை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இறை வழிபாடு ஆகியவற்றைப் பாா்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினா். இதைத் தொடா்ந்து தமிழகத்தின் உயா்ந்த மலைச் சிகரமான தொட்டபெட்டா காட்சிமுனைக்குச் சென்று இயற்கை காட்சிகளைக் குடும்பத்துடன் சனிக்கிழமை கண்டுரசித்தாா். இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அரசு அருங்காட்சியகத்தையும் குடும்பத்தினருடன் பாா்வையிட்டாா். ஆளுநரின் பயணத்தையொட்டி உதகை நகரப் பகுதிகள், சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.