சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பொக்காபுரத்தில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு

படம் உள்ளது... பொக்காபுரத்தில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு

News image

தீ விபத்தைக் கட்டுப்படுவத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:38 am IST

பொக்காபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரை அடுத்த மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து ஏற்படும்போது தீயைக் கட்டுப்படுத்துவது, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது தொடா்பான செயல்முறை விளக்கங்களை அளித்தனா்.