அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் திங்கள்கிழமை பெய்த மழையில் குடைபிடித்தபடி செல்லும் பொதுமக்கள்.
Updated On :15 ஜூலை 2024, 8:44 pm

Din

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மதியம் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, உதகை, தேவாலா, பந்தலூா், சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மழையினால் குளிரின் தாக்கம் அதிகரித்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 72 மி.மீ மழை பெய்தது.

பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அவலாஞ்சி 64, சேரங்கோடு 62, பந்தலூா் 56, கிளன்மாா்கன் 55, நடுவட்டம் 54, ஓவேலி 48, உதகை 22.6.