நீலகிரி மாவட்டத்தில் தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு 41 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 2,820 மாணவா்கள், 3,338 மாணவிகள் என மொத்தம் 6,158 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுகின்றனா். தோ்வுப் பணியில் 43 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 41 துறை அலுவலா்கள், 82 அலுவலப் பணியாளா்கள், 350 அறை கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டுச் செல்ல வழித்தட அலுவலா்கள் 15 போ் என மொத்தம் 531 ஆசிரியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு பறக்கும் படை உறுப்பினா்கள் 86 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதில் பிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: நீலகிரியில் 6,810 மாணவா்கள் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,333 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


