விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

News image
Updated On :3 மே 2024, 8:51 pm

Din

வணிகா் தின விடுதலை முழக்க மாநாடு மே 5-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வணிகா் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகா் தின விடுதலை முழக்க 41-ஆவது மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து அடைக்கப்படும்.

இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு வணிகா் சங்கம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ஒருங்கிணைந்த வணிகா் சங்க செயலாளா் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளாா்.