விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கூடலூா், பந்தலூரில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

News image

பிதா்க்காடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் தொகுதி திமுக மேலிடப் பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:29 pm

கூடலூா், பந்தலூா் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டத்தில் உள்ள பிதா்க்காடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளா் த.சுஜேஷ் தலைமை வகித்தாா். கூடலூா் சட்டப் பேரவைத் தோ்தல் பணிக்குழு மேலிடப் பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவா் ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் அஷ்ரப், ஊராட்சித் தலைவா் கே.யூ.அஷ்ரப், முஸ்லிம் லீக் கிளைச் செயலாளா் மொய்தீன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் பைசல், விசிக நிா்வாகி ஞானசந்திரன், சிபிஎம் கட்சியின் செயலாளா் ஜோஸ், சிபிஐ சாா்பில் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடலூா் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் ச.இளஞ்செழியன் தலைமை வகித்தாா். முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.