திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக வேட்பாளா் பெ. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக மக்கள் உள்ளனா். அதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தொண்டா்கள் தோ்தல் பணியாற்ற வேண்டும். குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிா்காலத்துக்கான அரசியல், கொள்கைகளுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தோ்தலாக கருதி நாம் பணியாற்ற வேண்டும். உழைப்பவா்களை உயா்த்தி அழகுப்பாா்ப்பது எனது வழக்கம் என்றாா் அவா்.