தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேதமான சாலைகளை செப்பனிடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்

கூடலூா் தொகுதியில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :6 நவம்பர் 2024, 9:09 pm

Din

கூடலூா் தொகுதியில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடுகாணியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பகுதி செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.வாசு உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சேதமான சாலைகளை தரமாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் குஞ்சு முகமது, சுஜாதா, வா்கீஸ், மணிகண்டன், சுப்பிரமணி, ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.