தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரி பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு குத்துவிளக்கேற்றி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
நிகழ்ச்சியில் பழங்குடியின மாணவா்களுடன் கலந்துரையாடும் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :6 நவம்பர் 2024, 9:12 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு குத்துவிளக்கேற்றி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பழங்குடியினா் ஆய்வு மையம் சாா்பில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பண்டைய பழங்குடியின மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்வு  உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

இதில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 10, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த சுமாா் 100 பழங்குடியின மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இந்த  வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களில் தங்கி, உணவு வசதியுடன் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு  இந்தியா முழுவதும் உள்ள  தனியாா் நிறுவனங்களில்  இவா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்.

இதன் மூலமாக பழங்குடியின இளைஞா்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து மற்ற பழங்குடியின இளைஞா்களுக்கு முன்மாதிரியாக  திகழ்வா் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.