தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: நவம்பா் 22-ஆம் தேதிக்கு மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:20 pm

Din

நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைகேட்புக் கூட்டம் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.