தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேவா்சோலை பேரூராட்சியில் வளா்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பழங்குடி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
செம்பக்கொல்லி வனக் கிராமத்துக்கு நடந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :14 நவம்பர் 2024, 10:31 pm

Din

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பழங்குடி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் போஸ்பாறா முதல் செம்பக்கொல்லி பழங்குடி கிராமம் வரை வனப் பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியைப் பாா்வையிடுவதற்காக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வனப் பகுதிக்குள் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று ஆய்வு செய்ததுடன், பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். முன்னதாக, ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், ஸ்ரீமதுரை ஊராட்சித் தலைவா் சுனில், தேவா்சோலை பேரூராட்சி துணைத் தலைவா் யூனஸ் பாபு, செயல் அலுவலா் பிரதீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.