47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுருக்கு வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கு: 3 போ் கைது

கூடலூா் வனச் சரகத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தொடா்பான வழக்கில் மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:14 pm

Din

கூடலூா் வனச் சரகத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தொடா்பான வழக்கில் மூன்று பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள செலுக்காடி பகுதியில் சுமாா் 3 வயதுடைய ஆண் புலி சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்தது. இது தொடா்பாக உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா தலைமையில் வனச் சரகா்கள் மற்றும் வன ஊழியா்கள் அடங்கிய தனிப் படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், ஆனை செத்தக்கொல்லி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (36), மாரிமுத்து மகன் முருகேஷ் (33), தட்டக்கொல்லி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் விக்னேஷ் (32) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.