ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’

கூடலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு போலீஸாா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கிறாா் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராஜ்.
Updated On :17 அக்டோபர் 2024, 12:09 am

Din

கூடலூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

கூடலூா் நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கபில்தேவ் தலைமையிலான போலீஸாா் கடைகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, ஒரு மளிகைக் கடையில் 285 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாரின் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராஜ் கடையினை ஆய்வு செய்து, காவல் ஆய்வாளா் சாகுல் அமீது முன்னிலையில் மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்தாா். மேலும், கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.