ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குன்னூரில் மக்கள் தொடா்பு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள மேலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:42 pm

Din

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே  உள்ள  மேலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை   நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் 58 பயனாளிகளுக்கு வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், கா்ப்பிணிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.57.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் கௌஷிக், சாா் ஆட்சியா் சங்கீதா, குன்னூா் வட்டாட்சியா் கனி சுந்தரம் உள்ளிட்ட  அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,  பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.